திருப்புகழ் : கருப்பற்று ஊறி
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தனத்தத் தானத் - தனதான
வரிகள்
கருப்பற் றூறிப் - பிறவாதே
கனக்கப் பாடுற் - றுழலாதே
திருப்பொற் பாதத் - தநுபூதி
சிறக்கப் பாலித் - தருள்வாயே
பரப்பற் றாருக் - குரியோனே
பரத்தப் பாலுக் - கணியோனே
திருக்கைச் சேவற் - கொடியோனே
செகத்திற் சோதிப் - பெருமாளே.
பதம் பிரித்தது
கருப்பற்று ஊறிப் பிறவாதே
கனக்கப் பாடுற்று உழலாதே
திருப்பொற் பாதத்து அநுபூதி
சிறக்கப் பாலித்து அருள்வாயே
பரப்பற்றாருக்கு உரியோனே
பரத்து அப்பாலுக்கு அணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே
செகத்திற் சோதிப் பெருமாளே.
பொருளுரை
மீண்டும் கருவிலே பிறக்கவேண்டும் என்ற ஆசையில் ஊறி மறுபடி பிறக்காமலும், மிகவும் கஷ்டங்களை அடைந்து யான் அலைந்து திரியாமலும், உன் அழகிய திருவடிகளாம் முக்தி அனுபவத்தை யான் சிறக்கும்படியாக என்னை ஆசீர்வதித்து அருள்வாயாக. ஆசைப் பெருக்கு இல்லாதவர்களுக்கு உரிமையானவனே, மேலானதாய் யாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு அருகில் உள்ளவனே, திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே, இவ்வுலகில் ஜோதி ரூபமாக விளங்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!