Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : கலைமேவு ஞான

திருத்தலம் : பவானி

சந்தம்

தனதான தானத் தனதான

தனதான தானத் - தனதான

வரிகள்

கலைமேவு ஞானப் பிரகாசக்

கடலாடி ஆசைக் - கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே

பதிஞான வாழ்வைத் - தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்

மனமேவு வாலக் - குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே

திருவாணி கூடற் - பெருமாளே.

பதம் பிரித்தது

கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி

ஆசைக் கடலேறி

பலமாய வாதிற் பிறழாதே

பதிஞான வாழ்வைத் தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்

மனமேவு வாலக் குமரேசா

சிலைவேட

சேவற் கொடியோனே

திருவாணி கூடற் பெருமாளே.

பொருளுரை

சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக் குளித்து, மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து, பலத்ததான, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக. வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே, லக்ஷ்மியும்

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்