திருப்புகழ் : மதியால் வித்தகன்
திருத்தலம் : கருவூர்
சந்தம்
தனதானத் தனதான தனதானத் - தனதான
வரிகள்
மதியால்வித் தகனாகி மனதாலுத் - தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் - தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் - பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் - பெருமாளே.
பதம் பிரித்தது
மதியால் வித்தகனாகி
மனதால் உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான
பரயோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே யென்
நினைவே நற் பொருளாயோய்
கதியே சொற் பரவேளே
கருவூரிற் பெருமாளே.
சொற்கள்
1. மதி - அறிவு
2. நிதி - செல்வம்
3. நித்தியம் - அழிவில்லாப் பொருள்
பொருளுரை
என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, சிறந்த பேரின்பப் பொருளானவனே, எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, கருவூர்த் தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!