திருப்புகழ் : நீதானெத்தனை
திருத்தலம் : திருவாரூர்
சந்தம்
தானானத் தனதான தானானத் - தனதான
வரிகள்
நீதானெத் தனையாலும் நீடூழிக் - க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் - கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் - குணசீலா
ஆதாரத் தொளியானே ஆரூரிற் - பெருமாளே.
பதம் பிரித்தது
நீதான் எனத் தனையாலும்
நீடூ ஊழிக் க்ருபையாகி
மாதானத் தனமாக
மாஞானக் கழல் தாராய்
வேதா மைத்துன வேளே
வீரா சற்குணசீலா
ஆதாரத்து ஒளியானே
ஆரூரிற் பெருமாளே.
சொற்கள்
1. கழல் - பாதம்
2. மா - சிறந்த
3. வேதா - பிரம்மன்
4. ஆரூர் - திருவாரூர்
பொருளுரை
நீ ஒருவன்தான் எல்லா வகையாலும் ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி சிறந்த தானப் பொருளாக மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய். பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே, வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே, ஆறு ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே, திருவாரூரில் இருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!
முகப்பு பக்கம் செல்லவும்