திருப்புகழ் : மருக்குலாவிய
திருத்தலம் : திருவிடைக்கழி
சந்தம்
தனத்த தானன தனதன - தனதான
வரிகள்
மருக்கு லாவிய மலரணை - கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது - மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் - பழியாதே
கடப்ப மாலையை யினிவர - விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை - மணவாளா
சமர்த்த னேமணி மரகத - மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி - லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய - பெருமாளே.
பதம் பிரித்தது
மருக்கு லாவிய மலரணை கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை யினி வரவிடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை மணவாளா
சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனில் உறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே.
பொருளுரை
நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும், வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், காரணமாக (கருவைத்து) நட்பு கொண்டாடிய அயலார்கள் பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்) உன் (அடையாளமாய்) கடம்ப மாலையை இனி அனுப்பி வைக்க வேண்டும். கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த, கொடிபோன்ற இடையை உடைய தேவயானையின் மணவாளனே, சாமர்த்தியசாலியே, மரகத மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே, திருவிடைக்கழியில் உள்ள திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில் வீற்றிருப்பவனே, திருக்கையில் வேல் ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!