Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : மாதர் வசமாய்

திருத்தலம் : கதிர்காமம்

சந்தம்

தானதன தானத் - தனதான

வரிகள்

மாதர்வச மாயுற் - றுழல்வாரும்

மாதவமெ ணாமற் - றிரிவாரும்

தீதகல வோதிப் - பணியாரும்

தீநரக மீதிற் - றிகழ்வாரே

நாதவொளி யேநற் - குணசீலா

நாரியிரு வோரைப் - புணர்வேலா

சோதிசிவ ஞானக் - குமரேசா

தோமில் கதிர்காமப் - பெருமாளே.

பதம் பிரித்தது

மாதர்வசமாயுற்று உழல்வாரும்

மாதவம் எ(ண்)ணாமல் திரிவாரும்

தீதகல ஓதிப் பணியாரும்

தீநரக மீதில் திகழ்வாரே

நாதவொளியே

நற் குணசீலா

நாரியிருவோரைப் புணர்வேலா

சோதிசிவ ஞானக் குமரேசா

தோமில் கதிர்காமப் பெருமாளே.

பொருளுரை

பெண்களின் வசப்பட்டுத் திரிபவர்களும், சிறந்த தவத்தை நினைக்காமல் அலைபவர்களும், தீமைகள் விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும், கொடிய நரகத்திலே உழன்று கிடப்பார்கள். ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே, நல்ல அருட்குண சீலனே, வள்ளி, தேவயானை என்ற இரு தேவியரை மணந்த வேலனே, ஜோதியான சிவஞானத்தைத் தரும் குமரக் கடவுளே, குற்றமற்ற கதிர்காமத்தில் வாழும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்