Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பரிமள களப

திருத்தலம் : திருச்செந்தூர்

சந்தம்

தனதன தனதன தந்தத் தந்தத் - தனதானா

தனதன தனதன தந்தத் தந்தத் - தனதானா

வரிகள்

பரிமள களபசு கந்தச் சந்தத் - தனமானார்

படையம படையென அந்திக் குங்கட் - கடையாலே

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் - குழலாலே

மறுகிடு மருளனை யின்புற் றன்புற் - றருள்வாயே

அரிதிரு மருகக டம்பத் தொங்கற் - றிருமார்பா

அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் - தெறிவேலா

திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் - குருநாதா

ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் - பெருமாளே.

பதம் பிரித்தது

பரிமள களப சுகந்த சந்தத் தனமானார்

படை யமபடையென அந்திக்கும் கண் கடையாலே

வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே

மறுகிடு மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே

அரிதிரு மருக கடம்பத் தொங்கற் றிருமார்பா

அலைகுமு குமுவென வெம்ப கண்டித்து எறிவேலா

திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா

ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.

சொற்கள்

1.

பொருளுரை

நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும் அழகிய மார்பினை உடைய பெண்களின், படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு ஒப்பாக கடைக்கண்ணால் சந்திக்கின்ற பார்வையாலும், கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும், மயங்கித் திரிகின்ற அடியேனை, இன்பத்துடனும், பிரியமாகவும் ஆட்கொண்டு அருள்வாயாக. திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே, கடம்ப மாலையை அணிந்துள்ள திருமார்பனே, அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு கடலினைக் கோபித்து வேலினைச் செலுத்தியவனே, முப்புரத்தை எரித்த சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா, வெற்றியை உடையவனே, பாவத்தை நீக்குபவனே, திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்