Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : காலனிடத்து

திருத்தலம் : திருச்செங்கோடு

சந்தம்

தான தனத் - தனதான

வரிகள்

காலனிடத் - தணுகாதே

காசினியிற் - பிறவாதே

சீலஅகத் - தியஞான

தேனமுதைத் - தருவாயே

மாலயனுக் - கரியானே

மாதவரைப் - பிரியானே

நாலுமறைப் - பொருளானே

நாககிரிப் - பெருமாளே.

பதம் பிரித்தது

காலனிடத்து அணுகாதே

காசினியிற் பிறவாதே

சீலஅகத்திய ஞான

தேனமுதைத் தருவாயே

மாலயனுக்கு அரியானே

மாதவரைப் பிரியானே

நாலுமறைப் பொருளானே

நாககிரிப் பெருமாளே.

பொருளுரை

யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, நாககிரியாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்