Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : பகலிரவினில்

திருத்தலம் : சென்னிமலை

சந்தம்

தனதனதனத் - தனதான

தனதனதனத் - தனதான

வரிகள்

பகலிரவினிற் - றடுமாறா

பதிகுருவெனத் - தெளிபோத

ரகசியமுரைத் - தநுபூதி

ரதநிலைதனைத் - தருவாயே

இகபரமதற் - கிறையோனே

இயலிசையின்முத் - தமிழோனே

சகசிரகிரிப் - பதிவேளே

சரவணபவப் - பெருமாளே.

பதம் பிரித்தது

பகலிரவினில் தடுமாறா

பதிகுருவெனத் தெளிபோத

ரகசியமுரைத்து அநுபூதி

ரதநிலைதனைத் தருவாயே

இகபரமதற்கு இறையோனே

இயலிசையின் முத்தமிழோனே

சகசிரகிரிப் பதிவேளே

சரவணபவப் பெருமாளே.

பொருளுரை

நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்