திருப்புகழ் : புமி அதனில்
திருத்தலம் : கயிலைமலை
சந்தம்
தனதனனத் - தனதான
தனதனனத் - தனதான
வரிகள்
புமியதனிற் -ப்ரபுவான
புகலியில்வித் - தகர்போல
அமிர்தகவித் - தொடைபாட
அடிமைதனக் - கருள்வாயே
சமரிலெதிர்த் - தசுர்மாளத்
தனியயில்விட் - டருள்வோனே
நமசிவயப் - பொருளானே
ரசதகிரிப் - பெருமாளே.
பதம் பிரித்தது
புமியதனிற் ப்ரபுவான
புகலியில் வித்தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக்கு அருள்வாயே
சமரிலெதிர்த்த சுர் மாள
தனியயில்விட்டு அருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.
பொருளுரை
இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!