Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : சிரத்தானத்தி

திருத்தலம் : திருக்காளத்தி

சந்தம்

தனத்தா தத்தத் - தனதான

தனத்தா தத்தத் - தனதான

வரிகள்

சிரத்தா னத்திற் - பணியாதே

செகத்தோர் பற்றைக் - குறியாதே

வருத்தா மற்றொப் - பிலதான

மலர்த்தாள் வைத்தெத் - தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் - துவநேசா

நினைத்தார் சித்தத் - துறைவோனே

திருத்தாள் முத்தர்க் - கருள்வோனே

திருக்கா ளத்திப் - பெருமாளே.

பதம் பிரித்தது

சிரத்தா னத்திற் பணியாதே

செகத்தோர் பற்றைக் குறியாதே

வருத்தா மற்றொப்பிலதான

மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய்

நிருத்தா கர்த்தததுவ நேச

நினைத்தார் சித்தத்து உறைவோனே

திருத்தாள் முத்தர்க்கு அருள்வோனே

திருக்கா ளத்திப் பெருமாளே.

பொருளுரை

தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான் உலகத்தோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்தி, தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடனம் ஆட வல்லவனே, தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே, உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு தந்தருள்பவனே, திருக்காளத்தியில் உள்ள பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்