திருப்புகழ் : அற்றைக்கு இரைதேடி
திருத்தலம் : காஞ்சீபுரம்
சந்தம்
தத்தத் தனதான தத்தத் - தனதான
தத்தத் தனதான தத்தத் - தனதானா
வரிகள்
அற்றைக் கிரைதேடி அத்தத் - திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் - பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் - தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் - பெருமாளே.
பதம் பிரித்தது
அற்றைக்கு இரைதேடி
அத்தத்திலும் ஆசை
பற்றித் தவியாத பற்றை
பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா
வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதா
கச்சிப் பெருமாளே.
சொற்கள்
1. அற்றைக்கு - அன்றாடம்/தினசரி
2. இரை- உணவு
3. அத்தத்திலும் - அனைத்திலும்
4. கதிர்வேலா - ஒளி பொருந்திய வேலையுடையவர்
5. வெற்பைத் - மலையை
6. சீலன் - உயர்ந்த குணமுடையவன்
7. கச்சி- காஞ்சிபுரம்
பொருளுரை
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, பொருள் மீதும் ஆசையினை வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை யான் பெறுதற்கு இயலுமோ? வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!