Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : ஈனமிகுத்துள பிறவி (ஆறு

திருத்தலம் : ஆறு

சந்தம்

தானதனத் தனதனன - தனதான

தானதனத் தனதனன - தனதான

வரிகள்

ஈனமிகுத் துளபிறவி - யணுகாதே

யானுமுனக் கடிமையென - வகையாக

ஞானஅருட் டனையருளி - வினைதீர

நாணமகற் றியகருணை - புரிவாயே

தானதவத் தினின்மிகுதி - பெறுவோனே

சாரதியுத் தமிதுணைவ - முருகோனே

ஆனதிருப் பதிகமரு - ளிளையோனே

ஆறுதிருப் பதியில்வளர் - பெருமாளே.

பதம் பிரித்தது

ஈனமிகுத்துள பிறவி யணுகாதே

யானுமுனக்கு அடிமையென வகையாக

ஞானஅருள் தனையருளி வினைதீர

நாணம் அகற்றிய கருணை புரிவாயே

தானதவத்தினின்மிகுதி பெறுவோனே

சாரதியுத்தமி துணைவ முருகோனே

ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே

ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே.

பொருளுரை

இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, அடியேனது வினைகள் அறவே நீங்க, (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக. அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே,

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்