Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : நிறைமதி முகமெனும்

திருத்தலம் : சுவாமிமலை

சந்தம்

தனதன தனதன - தனதான

தனதன தனதன - தனதான

வரிகள்

நிறைமதி முகமெனு - மொளியாலே

நெறிவிழி கணையெனு - நிகராலே

உறவுகொள் மடவர்க - ளுறவாமோ

உனதிரு வடிவியினி - யருள்வாயே

மறைபயி லரிதிரு - மருகோனே

மருவல ரசுரர்கள் - குலகாலா

குறமகள் தனைமண - மருள்வோனே

குருமலை மருவிய - பெருமாளே.

பதம் பிரித்தது

நிறைமதி முகமெனும் ஒளியாலே

நெறிவிழி கணையெனு நிகராலே

உறவுகொள் மடவர்கள் உறவாமோ

உனதிரு வடியினி யருள்வாயே

மறைபயி லரிதிரு மருகோனே

மருவல ரசுரர்கள் குலகாலா

குறமகள் தனை மண மருள்வோனே

குருமலை மருவிய பெருமாளே.

பொருளுரை

பூரண சந்திரன் போன்ற முகத்தின் பிரகாசத்தாலும், வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் அம்பு போலச் செய்யும் போரினாலும், சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக. வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, பகைவர்களாம் அசுரர்களின் குலத்தை அழித்த காலனே, குறத்தி வள்ளியை திருமணம் செய்து அருளியவனே, குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்