Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : வசனமிக ஏற்றி

திருத்தலம் : பழநி

சந்தம்

தனதனன தாத்த -தனதான

தனதனன தாத்த -தனதான

வரிகள்

வசனமிக வேற்றி - மறவாதே

மனதுதுய ராற்றி - லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ - ரமதாலே

இகபரசெள பாக்ய - மருள்வாயே

பசுபதிசி வாக்ய - முணர்வோனே

பழநிமலை வீற்ற - ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி - மிகவாழ

அமரர்சிறை மீட்ட - பெருமாளே.

பதம் பிரித்தது

வசனமிக ஏற்றி மறவாதே

மனது துயர் ஆற்றில் உழலாதே

இசைபயில் ஷடாட்சரம் அதாலே

இகபரசெள பாக்யம் அருள்வாயே

பசுபதிசி வாக்யம் உணர்வோனே

பழனிமலை வீற்(று) அருளும் வேலா

அசுரர்கிளை வாட்டி மிகவாழ

அமரர் சிறை மீட்ட பெருமாளே.

பொருளுரை

உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து திரியாதிருக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள் புரிவாயாக சிவபிரானது வேத சிவாகமங்களை அறிந்தவனே பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருள் புரியும் வேலனே அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும், தேவர்கள் நன்கு வாழும்படியாக சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்